search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு"

    பெண்ணை அரிவாளால் வெட்டி 5½ பவுன் தங்க சங்கிலியை பறித்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கரூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
    கரூர்:

    தென்னிலை அருகே உள்ள கிடைக்காரன்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் ஈஸ்வரி(வயது 45). இருவரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தென்னிலையில் இருந்து கிடைக்காரன்பாளையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத 2 நபர்கள், மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை கீழே தள்ளி ஈஸ்வரியை அரிவாளால் வெட்டி காயப்படுத்திவிட்டு, அவர் கழுத்தில் கிடந்த 5½ பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து தென்னிலை போலீசார் வழக்குப் பதிவு செய்து, திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, செம்பட்டியை சேர்ந்த ராயத்அலி என்பவருடைய மகன் ஹம்ஷாஉசேன்(22) மற்றும் ஒரு சிறுவன் என 2 பேரை கைது செய்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த கரூர் மகிளா கோர்ட்டு நீதிபதி சசிகலா, பெண்ணை அரிவாளால் வெட்டிய குற்றத்திற்காக ஹம்ஷாஉசேனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தங்க சங்கிலியை பறித்ததற்காக 3 மாதங்களும், ரூ.500 அபராதமும் கட்ட தீர்ப்பு அளித்தார். மேலும் அபராதத்தை கட்டத்தவறினால் மேலும் ஒரு மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.

    இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளி சிறுவன் என்பதால் அவனது வழக்கு கரூர் சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
    ×